Tamil Story-வாய்ப்புகள் நிறைந்ததே வாழ்க்கை
Human value story in Tamil on truth and wisdom
நம் கதவைத் தட்டும் ஒவ்வொரு வாய்ப்பையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் விரும்பியது கிடைக்கும் வரை காத்திருந்தால், நமக்கு அந்த அளவிற்கு வாய்ப்புகள் வராது. நம் வாழ்க்கையையே மாற்றக்கூடிய ஒரு வாய்ப்பைத் தவற விடுவதை விட, மோசமானது வேறு எதுவுமில்லை. தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு வாய்ப்பிற்காக காத்துக் கொண்டு இருக்காதீர்கள். சாதாரண சந்தர்ப்பங்களைக் கைப்பற்றி, சிறந்தவையாக மாற்ற முயற்சியுங்கள். சிறிய வாய்ப்புகள் தான் பெரிய சாகச முயற்சிகளின் தொடக்கம். ஒருவன், தான் செய்த தவறுகளை விட தவறவிட்ட வாய்ப்புக்களை எண்ணி தான் எப்பொழுதும் வருந்துவான். பலவீனமானவன் வாய்ப்புகளுக்காக காத்திருப்பான். வலிமையானவன், வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு அதை சிறப்பாக கையாள்வான்.
http://saibalsanskaar.wordpress.com